சனி, 12 ஜனவரி, 2013


சீனாவில் நிலச்சரிவு மண்ணில் புதைந்து 46 பேர் பலி!

on Saturday, 12 January 2013 13:29.
சீனாவில் கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 46 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. சீனாவின் யுனான் மாகாணத்தில் கடுமையான தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைக்கிராம பகுதிகளில் இன்று காலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

பெண் கற்பழிப்புக்கு நீதி கிடைக்கவேண்டும் - ஐ.நா. பெண் அதிகாரி!

on Saturday, 12 January 2013 13:11.
டெல்லி மருத்துவ மாணவி கொடூர கற்பழிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த 13 நாட்கள் வேதனைக்குப் பிறகான அவரது பரிதாப மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று ஐ.நா. பெண் அதிகாரி மிச்செல் பாச்செலெட் வலியுறுத்தியுள்ளார். சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான Michelle Bachelet...

தாக்குதல் நடத்தப்பட்டே ரிசானாவிடம் குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது!

on Saturday, 12 January 2013 10:45.
ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார். சவூதி அரேபியாவில் 2005 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சென்ற ரிசானா, ஒரு வாரக்காலத்தில் குறித்த வீட்டின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை...

கட்டாரில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை விதிப்பு!

on Saturday, 12 January 2013 08:41.
இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் பணிபுரிந்த இந்திய இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை... 

சோமாலி கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை பணியாளர் விடுதலை!

on Saturday, 12 January 2013 08:31.
சோமாலியக் கடற்கொள்ளையர்கள் பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கப்பல் பணியாளர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சோமாலிய கடற் கொள்ளையர்களால் 2010ஆம் ஆண்டில் பணயமாக பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கப்பல்... 

இந்துருவ - மஹவத்த பகுதியில் இரு பெண்கள் குத்திக் கொலை!

on Saturday, 12 January 2013 08:16.
இந்துருவ - மஹவத்த பகுதியில் கூரான ஆயுதத்தினால் குத்தி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.10 அளவில் வீட்டிற்குள் நுழைந்த ஒருவரே குறித்த பெண்ணை கொலைசெய்திருக்கலாம் என பொலிஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. பலத்த காயங்களுக்குள்ளான பெண்... 

ஆயுதங்களுடன் ஈராக் சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓட்டம்!

on Saturday, 12 January 2013 06:28.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடி விட்டனர். அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த அந்த கைதிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

நேபாலில் பயணிகள் பஸ் தடம்புரண்டு விபத்து 29 பேர் பலி!

on Saturday, 12 January 2013 06:08.
நேபாலில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில், 29 பேர் பலி,12 பேர் காயமடைந்துள்ளனர். நேபாலின் தென் மேற்கு பகுதியிலுள்ள, மலையில் பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நேபால் பொலிஸார் அறிவித்துள்ளனர்.இவ்விபத்தில் கடுங்காயங்களுக்கு உள்ளானவர்கள்...

தலை துண்டிக்கப்பட்ட ரிசானாவின் காட்சி - சர்வதேச ரீதியாக எழும் கண்டனங்கள்!

on Saturday, 12 January 2013 05:53.
சிறிலங்காவைச் சேர்ந்த பணிப்பெண் றிசானா நபீக்கை, சிரச்சேதம் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டமை பெரும் சர்வதேச ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியான றிசானாக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும். கடந்த புதன்கிழமை றியாத்தில், அந்நாட்டு அதிகாரிகளால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக